“நம்மை போல கொரோனாவுக்கும் வாழ உரிமை உண்டு” – மாநில முதல்வர் அதிரடி பேச்சு!

கொரோனா வைரஸுக்கு மற்றவர்களை போல “வாழ உரிமை” உள்ளது என முன்னாள் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திரிவேந்திர சிங் ராவத், “த்துவார்த்த ரீதியாக கொரோனா வைரஸ் ஒரு உயிருள்ள உயிரினம், நம்மை போல அதற்கும் வாழ உரிமை உண்டு. மனிதர்களாகிய நாம், நம்மை மிகவும் புத்திசாலி என்று நினைத்து அதை அகற்றத் தயாராக இருக்கிறோம். எனவே அது தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கிறது.

இருப்பினும், மனிதன் பாதுகாப்பாக இருக்க வைரஸை எதிர்த்து போராட வேண்டும்” என தெரிவித்தார். இவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டுவருகிறது. முழு நாடும் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடும் நேரத்தில் இந்த கருத்து தேவையா என நெட்டிசன்கள் கொந்தளித்துவருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!