ஆக்ஸிஜன் கேட்ட பெண்ணை படுக்கையறைக்கு அழைத்த ஆண்: இந்தியாவில் நடக்கும் அவலம்!

புதுடெல்லியில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறை மற்றும் கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பலர் ஆக்ஜிஜென் தேவைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பலர் தங்கள் உறவினர்களின் உயிரைக் காப்பாற்ற ட்விட்டர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் ஐ.சி.யூ படுக்கையிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் வரை கேட்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்கும்போது, ​​இணையத்தில் சமீபத்தில் வந்த ஒரு கசப்பான செய்தியால் வேதனையில் தள்ளியுள்ளது .இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட சிலர் அதில் ஆதாயம் தேடும் அவலம் நடந்துள்ளது

சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் ட்விட்டரில் தனது சோதனையை விவரித்தார். அதில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஈடாக தனது நண்பரின் சகோதரியிடம் செக்ஸ் கேட்கப்பட்டதாக அந்த பெண் கூறினார்.

டெல்லியைச் சேர்ந்த அந்த பெண் ட்விட்டரில் , “என் நண்பரின் சகோதரி வசிக்கும் காலனியில், அவரின் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்ட போது ,அவர் அவருடன் படுக்கையினை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.”என்று குறிப்பிட்டுள்ளார்

இந்த ட்வீட்டைப் படித்ததும் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர் மற்றும் அவர் மீது புகார் அளிக்குமாறு அந்தப் பெண்ணை வலியுறுத்தினர். சில பயனர்கள் அந்த அபார்ட்மெண்டின் குடியுரிமை நலச் சங்கத்தில் (RWA) புகார் அளிக்க பரிந்துரைத்தனர், இந்த செய்தி சமூக ஊடகத்தில் புயலை உண்டாக்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!