மருத்துவர்களின் செயலால் பறிபோன உயிர்: கதறி அழுத மனைவி!

தமிழகத்தில் கொரோனா பாதித்த கணவனின் ஆக்ஸிஜன் சிகிச்சையை மருத்துவர்கள் அகற்றிவிட்டதாக கூறி, மனைவி கதறி அழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது பரவல் தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் தீவிர நடவடிக்கையில் இறங்கி வருகின்றன.

அதன் படி தமிழகத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு, ஆக்சிஜன் வசதியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடன் அவருடைய மனைவி கயல்விழி உதவிக்கு இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கயல்விழி சாப்பிடுவதற்காக வெளியே சென்று திரும்பி வந்து பார்த்த போதும், மருத்துவர்கள் கணவருக்கு வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜனை எடுத்துவிட்டதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்,.

ஆக்ஸிஜன் சிகிச்சை இல்லாததால், ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். தன் கணவரின் மரணத்திற்கு மருத்துவர்களே காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கணவரின் உடலை எடுக்கவிடமாக கதறி அழுதார்.

இதையடுத்து பொலிசார் மற்றும் மருத்துவர்கள் அவரை சமாதானப்படுத்தி, அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர்தான் தங்கள் பகுதியில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்வோம் என கூறியுள்ளனர்.

ஆனால் கயல்விழி இறந்த கணவரின் உடலை கட்டி பிடித்தபடி உடலை தரமாட்டேன் என கூறியதால் சடலம் 2 மணிநேரத்திற்கு மேல் அவசர சிகிச்சை பிரிவிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!