அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும்!

தமக்கான அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரும் போது, அவர்களைப் புலிகளெனக் கூறும் அரசாங்கம், தற்போது சீனர்களுக்கு ‘சீழத்தை’ வழங்கியுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், நாட்டின் அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றுமெனவும் எச்சரித்தார்.

நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “உலகின் பல்வேறு நாடுகளுக்கு நுழைந்த சீனா, அந்தந்த நாடுகளில் உள்ள தொழிற்றுறைகளைக் கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இலங்கைக்கு உள்ள அமைவிடத்தையே கைப்பற்றப் பார்க்கிறது” என்றார்.

“மாகாண சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பிரித்துக் கேட்கும் தமிழர்களை புலிகள் என்கிறார். இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்கிறார்கள். ஆனால், சீனாவுக்கு மாத்திரம் நாட்டுக்குள் இடத்தை வழங்கியுள்ளார்கள். அதனை சீழம் என்றே கூறவேண்டும்.

“பொருளாதாரத்தில் நாட்டினுடைய அனைத்துப் பக்கங்களையும் சீனா கைப்பற்றும். ஸ்ரீ லங்கா தற்போது சீலங்காவாக மாறப்போகிறது” எனவும், சாணக்கியன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!