கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொடர்பிலிருந்த எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்கட்சி தலைவருடன் தொடர்பிலிருந்த ஏனையவர்களையும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் படைக்கள சேவிதர் அறிவித்துள்ளார்.
லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகிய இருவரும் எதிர்கட்சி தலைவருடன் தொடர்பிலிருந்தமை சிசி ரீவி கெமரா மூலம் கண்டறியப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!