கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் கப்பலில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ள, அண்மையில் தீவிபத்து ஏற்பட்ட எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன. அத்துடன் கப்பலில் இருந்து 25 கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் இந்தியர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!