மலேசியாவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரயில்கள்: பயணிகளின் நிலை?

மலேசியாவில் இரண்டு இரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவின் தலைநகர் கோலாம்பூரில் உள்ள KLCC இரயில் நிலையத்திற்கு அருகே இந்த கொரோன விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை அறிந்த பிரதமர் Muhyiddin Yassin உடனடியாக இது குறித்து விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விபத்து காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை யாரும் உயிரிழக்க வில்லை என்று, போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Wee Ka Siong கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது ஒரு தீவிரமான விபத்து, இடு குறித்து விசாரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

APAD-(APAD என்பது நில பொது போக்குவரத்து முகமைக்கான சுருக்கம்.)இன் இயக்குநர் ஜெனரல் இந்த சம்பவத்தின் ஆரம்ப அறிக்கையை நாளை எனக்கு அனுப்புவார். இதில் ஒரு இரயில் 20 கி.மீற்றர் வேகத்திலும், மற்றொரு இரயில் 40 கி.மீற்றர் வேகத்திலும் வந்த போது, இந்த விபத்து நடந்துள்ளது. பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

விபத்து ஏற்பட போகுது என்பதை அறிந்த, சில பயணிகள் உடனடியாக இரயிலில் இருந்து வெளியேற முயன்றதால், அதிக காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர இப்போது என்னால் எதையும் கூற முடியாது, முழு விசாரணைக்கு பின்னர் அனைத்தையும் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!