பூநகரி விபத்தில் இருவர் பலி!

மன்னார் – பூநகரி வீதியில் பல்லவராயன்கட்டு சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முழங்காவிலை வசிப்பிடமாக கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலரான பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் அவரது மனைவி சுனித்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிராம அலுவலரான நகுலேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அதேவேளை, இவரது மனைவி படுகாயடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!