மன்னாரில் கடும் காற்று – வாடிகள், படகுகள், வலைகள் சேதம்!

????????????????????????????????????
மன்னார் மாவட்டத்தில் நேற்று கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பின் காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் சேதமாகியுள்ளன.

செளத்பார், தாழ்வுபாடு,ஓலைத்தொடுவாய்,வங்காலை அச்சங்குளம்,அரிப்பு உள்ளிட்ட பல மீனவ கிராம கடற் பகுதிகளில் தொடர்ந்து அதிவேக காற்று மற்றும் கடல் கொந்தழிப்பு காணப்படுவதால் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது.

இதேவேளை, மன்னார் செளத்பார் பகுதியில் உள்ள கடற்படை முகாமும் சேதமடைந்துள்ளது. தொடர்ச்சியாக காற்று வீசுவதால் பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா காரணமாக வாழ்வாதரத்தை இழந்துள்ள நிலையில் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் பதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அரசாங்கம் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களின் வாழ்வாதாரத்துக்கு சேதாமன வாடிகள் மற்றும் படகுகளை புனர்நிர்மானம் செய்வதற்கான உதவிகளை தருமாறும் பாதிக்கப்பட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!