மேலும் 10 லட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சைனாபார்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தினால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.

எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி இலங்கைக்கு குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!