இலங்கையில் 135 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

இலங்கையில் 135 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) கொரோனா நிலைமை குறித்து கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 2,769 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் 609 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மூன்றாவது அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!