குப்பைக்கு தீவைத்த போது குண்டு வெடிப்பு! – ஒருவர் காயம்.

முல்லைத்தீவு – சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டியபோது குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதோடு, முல்லைத்தீவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!