செப்டெம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் – ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு!

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டெம்பர் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டெம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!