15 வயது சிறுமி விவகாரம் – கொழும்பின் முன்னணி வைத்தியசாலை இருதய நோய் நிபுணத்துவ மருத்துவரும் சிக்கினார்

15 வயது சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள முன்னணி வைத்தியசாலையொன்றின் 41 வயது இருதய நோய் நிபுணத்துவ மருத்துவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மருத்துவர் பண்டாரகமையை சேர்ந்தவர் எனவும், இது தொடர்பாக 33 வயதுடைய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

15 வயதான சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மாலைதீவின் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஒருவர், கப்பல் ஒன்றின் மாலுமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கைதாகி வரும் நிலையில் இந்த நிபுணத்துவ மருத்துவரும் கைதாகியுள்ளார்.

மேலும் சிறுமி துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் இதுவரையில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 32 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!