அரசில் இருந்து விலகி எதிர்க்கட்சியை வலுப்படுத்த தயாரில்லை – அமைச்சர் மகிந்த அமரவீர

பொதுஜன பெரமுனவுடன் சில பிரச்சினைகள் இருக்கும் பின்னணியில் கூட அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் தயாரில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கீழ் மட்டத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் பிரச்சினை இருக்கின்றது. இல்லை என்று சொல்ல முடியாது. பிரதனமாக எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணிகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியினர் என்ற மதிப்பு வழங்கப்படுவதில்லை.

இது சம்பந்தமாக சில பிரச்சினைகள் உள்ளன. பல்வேறு நபர்கள் பலவற்றை கூறினாலும் கட்சியின் தலைவர்கள் எதனையும் கூறவில்லை.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து தலைவர்களுடன் சகல பிரச்சினைகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!