இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் கிரிக்கட் கமிட்டி குழு உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மற்றும் பாடசாலை கிரிக்கட்டை குறுங்கால அடிப்படையிலும் நீண்ட கால அடிப்படையிலும் எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த திட்டங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
கிரிக்கட் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!