டெல்டா வைரஸ் எதிர்வரும் வாரங்களில் மேலும் பரவும் அபாயம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

நாட்டில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் எதிர்வரும் இரண்டுவாரங்களில் மேலும் பரவலடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் நாட்டின் பல பாகங்களில் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்

எனவே டெல்டா வகை வைரஸ் நாட்டில் தொடர்ந்தும் பரவலடைவதை தடுக்க வேண்டுமாயின் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!