மேலும் 41 பேர் கொரோனாவுக்குப் பலி!

நாட்டில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 41 பேர் மரணமடைந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,702 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 23 ஆண்களும், பெண்கள் 18 பேரும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!