30 அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் செப்டெம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி

30 அகவைக்கு மேற்பட்ட இலங்கையர்கள் அனைவருக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூக்குப் பிறகு நாடு மீண்டும் திறக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் கூறியுள்ளார்.

புலத்சிங்கள என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அடுத்த வாரம் பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி முகக்கவசங்களின் விலையை மேலும் குறைக்க முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இப்போது ஒரு முகக்கவசம் 14 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!