Pfizer தடுப்பூசியின் மற்றுமொரு தொகை நாட்டை வந்தடைந்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கம் கொள்வனவும் செய்த மற்றுமொரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டார் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 2.30 அளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

இதேவேளை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகள் விசேட லொறிகள் மூலம் களஞ்சியப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!