பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ள பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கேசன்துறையில் விடுதி திறப்பு வைபவம், வேலணை நகரை பல்பரிமாண நகரமாக்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், யாழ், நாவற்குழி பகுதியில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 182 வீடுகளுக்கான உரிமப் பத்திரங்களை வழங்கிவைப்பதற்காகவும், சில வீட்டுத் திட்ட வீடுகளுக்கான அடிக்கல்லை நடுவதற்காகவும் எதிர்வரும் ஜுலை 31ம் திகதி மற்றும் ஓகஸ்ட் 1ம் திகதி பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிரதமரின் அந்தப் பயணம் தற்பொழுது ரத்தாகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!