கட்சியில் மீள இணையுமாறு மங்கள சமரவீரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

கட்சியில் மீள இணைந்து கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரான ரெஹான் ஜயவிக்ரம இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்துக்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மங்கள கூறுவது போன்று எதிர்க்கட்சி பலவீனமானது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மங்கள சமரவீர ஆளும் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவினை வழங்குவதனை விடவும் பொதுவான ஓர் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்படுமாறு அவர் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!