வட்டுவாகல் காணியை அபகரிக்க இன்று அளவீடு!

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை நில அளவை மேற்கொள்வதற்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று வட்டுவாகலில் காணி அபகரிக்க இராணுவம் முயற்சி செய்யலாம் எனவும், ஒன்று திரண்டு எதிர்க்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது. நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம் பெற்றது.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகளே இடம்பெறுகின்றன. காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு – நிறுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!