சிறுவர்கள் மத்தியில் தொற்று பரவல் அதிகரிப்பு!

நாளாந்தம் கொரோனா தொற்றுடன் 15 சிறுவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும், சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்றுப் பரவும் வீதம் அதிகரித்துள்ளது என்றும், பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 70 சிறுவர்கள் தற்போது சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்றும் தெரிவித்துள்ள அவர், ஆகையால், சிறுவர்கள் தொடர்பில் ஆகக்கூடுதலான கவனத்தை செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!