கொவிட் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு!

டெல்டா வைரஸ் மாத்திரமின்றி புதிய வைரஸ் திரிபுகளும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்தில் நாட்டை முழுமையாக திறப்பதற்கு பொருத்தமானதல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். தடுப்பூசி வழங்கும் பணிகள் மிகவும் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.

இவ்வாறான நிலையில் சகல அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை கர்பிணிகள் , சிறு குழந்தைகளுடைய தாய்மாருக்கு ஆபத்தாகும். டெல்டாவுடன் புதிய திரிபுகளும் பரவ ஆரம்பித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தான் செயற்படுவதா?

இவ்வாறான தீர்மானங்கள் ஊடாக அரசாங்கமே நாட்டு மக்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. டெல்டா அச்சுறுத்தலிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டை முழுமையாக திறப்பதற்கான பொறுத்தமான சந்தர்ப்பம் இதுவல்ல. இதுவரை பதிவாகியுள்ள மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்பதோடு , இந்த மரணங்களின் சாபமும் அரசாங்கத்தையே சேரும்.

எனவே தொடர்ந்தும் மக்களின் வாழக்கையுடன் விளையாடிக் கொண்டிருக்காமல் உரிய நேரத்தில் பொறுத்தமான தீர்மானங்களை எடுக்குமாறும் , சுகாதார கட்டமைப்பு தேவையான வசதிகளை தாமதமின்றி ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!