ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரத் தேவையில்லை!

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களையும் கடமைக்கு வருமாறு விடுத்த அழைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு முந்தைய முடிவு இரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் இணையவழி ஊடாக கற்பித்தலை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை தமது கோரிக்கை நிறைவேறும்வரை தாம் இணையவழி கற்பித்தல் செயற்பாட்டில் இருந்து விலகியிருப்பதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!