உள்நாட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொவிட் 19 தொற்றாளர்களும் உயரிழக்கவில்லை – ஆயுர்வேத திணைக்களம்

உள்நாட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொவிட் 19 தொற்றாளர்களும் உயரிழக்கவில்லை என ஆயுர்வேத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஆயுர்வேத வைத்தியசாலைகளில் இதுவரை ஆயிரத்து 33 படுக்ககைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 835 பேர் தற்போது சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும், ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவர்களில் இரண்டாயிரத்து 843 பேர், எந்தவித சிக்கல்களும் இன்றி குணமடைந்துள்ளதாகவும், ஆயுர்வேத ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 09 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில், தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு ஆயுர்வேத நிலையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரை குணப்படுத்துவதற்காக, சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, உள்நாட்டு வைத்தியத்தின் ஊடாக, கொவிட் தொற்றைக் குணப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!