அனைத்து அமைச்சுக்களுக்கும் புதிய சுகாதார அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு

புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ள கெஹெலிய ரம்புக்வெல அனைத்து அமைச்சுக்களுக்கும் உத்தவொன்றை பிறப்பித்துள்ளார்.

அதன்படி அனைத்து அமைச்சுக்களிலும் கோவிட் ஒழிப்பு குழுவொன்றை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Zoom தொழிநுட்பத்தினூடாக அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், பிரதான அதிகாரி ஒருவரின் கீழ் நிறுவன மட்டத்தில் கோவிட் ஒழிப்பு குழு நியமிக்கப்படவுள்ளது.

அத்துடன், நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லது அசௌகரியத்திற்கு உள்ளாகும் பட்சத்தில் அரசாங்கம் வௌியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய குறித்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.

மேலும் கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம், ஒவ்வொரு நிறுவனத்திலும் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பிலும் இந்த குழு கண்காணிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!