164 வாகனங்களை கொள்வனவு செய்ய அனுமதி கோரும் பசில் ராஜபக்ச

164 வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையில், அனுமதி கோரியுள்ளார்.

அத்தியாவசிய சேவைகளுக்காக இவ்வாறு இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நோயாளர் காவு வண்டிகள், நீர் தாங்கி வாகனங்கள், டபள் கெப் வாகனங்கள் உள்ளிட்ட 164 வாகனங்கள் இவ்வாறு கொள்வனவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைச்சரவையினால் சில வகை வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!