மேலும் 21 நகரங்கள் சுயமாக முடங்கின!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று மேலும் 21 நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு, அந்தந்த நகர வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இந்த நகரங்களில் மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் 58 நகரங்களில் உள்ள கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக அதன் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, வாரக்காபொல, வாரியபொல, துனகஹ, குளியாபிட்டிய, கம்புருபிட்டிய, உருபொக்க, பாதுக, எஹெலியகொட, மெதகம, ஹன்ஹமுனுவ, கிளிநொச்சி, திஸ்ஸமஹாரரம, வீரவில, பன்னேகமுவ, யோதகண்டிய, தெல்கொட, ஹிக்கடுவ, ஹபராதுவ, படல்கும்புர, காலி உடுகம, ஹசலக ஆகிய நகரங்களின் கடைகளே, மூடப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!