களத்தில் இறங்கிய விமானப்படை: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு விமானங்களில் தூதர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்துள்ளனர்.

மேலும், 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் காபூல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வரும் பட்சத்தில் அவர்களை விமானப்படை விமான மூலம் மீட்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சி-17 விமானத்தில் குறைந்தது 250 இந்தியர்களையாவது மீட்டுவிடலாம் ஆனால் காபூல் விமான நிலையத்தை எத்தனை பேர் வந்தடைவார்கள் என்பதை பொறுத்தே மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை தெரியும் என தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!