மேலும் ஒரு மில்லியன் sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

சீனாவில் இருந்து மேலும் ஒரு தொகை sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சீனாவின் beijing நகரில் இருந்து ஶ்ரீலங்கன் எயார்வேய்ஸுக்குச் சொந்தமான விமானம் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 05 மணியளவில் கட்டுநாயக்க பணடாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தடைந்துள்ளன.

இதன்படி, ஒரு மில்லியன் sinopharm கொரோனா தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் sinopharm கொரோனா தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு இதுவரையில் 15 தசம் 7 மில்லியன் inopharm கொரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளமை குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!