வைத்தியசாலையில் குவிந்த சடலங்கள் – போலியான படத்தை வெளியிட்டவர் கைது!

களுபோவில போதனா வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்றினார் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் குவிந்து கிடப்பது போன்ற போலியான புகைப்படத்தை சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நுகேகொடையை சேர்ந்த 36 வயதான அவர், தனிமைப்படுத்தல் மற்றும் கணினி குற்றச் சட்டங்களின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!