கொரோனா மரணங்கள் கிடுகிடுவென உயர்வு! – நேற்று முன்தினமும் 190 பேர்.

நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 வயதுக்குட்பட்டவர்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 21 ஆண்களும், 17 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 91 ஆண்களும். 59 பெண்களுமாக 190 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,750 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!