சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் போலியானவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில், குறித்த படங்கள் மற்றும் காணொளிகள் போலியானவை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!