இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார் ஜனாதிபதி!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று கூடவுள்ள கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் தரவுகளை ஆராய்ந்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால், எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!