எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் நொவெம்பர் மாத்திற்குள் தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிபபிட்டார்.

இலங்கைக்கான கியுப நாட்டின் தூதுவர் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோருக்கிடைளில் நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாத நடுப்பகுதிக்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தன்னிறைவு அடையும் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் இரு தடுப்பூசிகளும் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதனை தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலத்தப்படும் என அவர் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!