அரசாங்கமே வீழ்ச்சி காணும் – அமைச்சர் உதய கம்மன்பில

அரசாங்கத்தின் மீதும், நாட்டின் மீதும் அச்சுறுத்தல் உள்ளதை கருத்தில் கொண்டு நாம் குரைக்கின்றோம், ஆனால் ஆபத்தை அறியாது எம்மை துரத்தியடிக்க நடவடிக்கை எடுத்தால் இறுதியில் அரசாங்கமே வீழ்ச்சி காணும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கையை, 2028ஆம் ஆண்டு வரை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை இலங்கையின் எரிவாயு தொடர்பான ஆராய்ச்சிக்கு தடையாக அமையும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!