மைத்திரி, புலனாய்வு அதிகாரிகளை பிடிக்க முயற்சி! September 30, 2021 9:33 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் அலைபேசியிலிருந்த மதர்போர்டை கொண்டு செல்ல வெளிநாட்டு உளவுத் துறைக்கு உத்தரவிட்டது யார் என்று தெரியவந்தால், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் யார் என்று தெரியவரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசியல் ரீதியாக தாக்கக் கூடியவர்களைப் பற்றி மட்டுமே நாங்கள் இன்று பேசுகிறோம் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.சஹரானின் அலைபேசியின் மதர்போர்டை யார் எடுத்தார்கள் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை என்றும் பொலிஸின் எதிர்ப்பையும் மீறி அதை வேறு நாட்டிற்கு எடுத்துச் செல்ல நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.தாக்குதலின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அலைபேசி, வெளிநாட்டு உளவுத் துறை மூலம் எடுத்துச் செல்லப்பட்மைக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளை விசாரித்தால், சம்பந்தப்பட்டோரை கண்டுபிடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…