திருட்டுத்தனமாக நெடுந்தீவுக்கு வரும் பாகிஸ்தான் தூதுவர்! October 2, 2021 1:09 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest நெடுந்தீவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் துாதுவரை அரச சார்பு கட்சி ஒன்றின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேசசபை உறுப்பினர்களுமே வரவேற்றார்கள் என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் க.விந்தன் தகவல் வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தான் தூதுவர் தீவகத்தை இலக்கு வைத்து அடிக்கடி விஜயம் செய்வதாக நாம் அறிகிறோம். தீவகத்தில் ஏற்கெனவே சீனா மீள் புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டம் என்ற போர்வையில் தீவகத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான நாடுகளாக இருக்கின்ற பாகிஸ்தான் மற்றும் சீனா யாழ்.தீவகப் பகுதிகளில் கால் பதிப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் பாரிய ஆபத்து.இவ்வாறான நிலையில் திருட்டுத்தனமாக நெடுந்தீவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் தூதுவரை பிரதேசசபை வாகனத்தில் அழைத்துச் சென்று நெடுந்தீவை சுற்றி காண்பித்தமை எமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகின்றது.ஆகவே பாகிஸ்தான் தூதுவர் நெடுந்தீவில் ஏதாவது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் மீண்டும் விஜயம் செய்வாராயின் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் குதிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…