மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

அமெரிக்காவிடம் இருந்து மேலும் 3 லட்சத்து 4 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தால் z z zஅமெரிக்காவிடம் கோரப்பட்ட 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகளில் முதற்கட்ட தடுப்பூசி இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக .அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார்

இதன்படி கட்டார் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த QR-668 விமானமூடாக இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன

இதேவேளை இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மத்திய களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை, எதிர்வரும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசிகள் பெருமளவில் நாட்டிற்கு பெறப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!