தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகம் முழுதும் 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது . இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக கடற்பகுதிகளில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது .

இதன் காரணமாக , புதுக்கோட்டை , ராமநாதபுரம் , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி , மின்னலுடன் மிக கன மழை பெய்யும் .

கன்னியாகுமரி , திருநெல்வேலி , தென்காசி , கோவை , நீலகிரி , ஈரோடு , மதுரை , விருதுநகர் , திருச்சி மாவட்டங்களில் கன மழை பெய்யும் .

மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் . தென் மாவட்டங்கள் , அரியலுார் , பெரம்பலுார் , கடலுார் , தஞ்சை , திருவாரூர் , நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் , நாளை ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் .

விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , கரூர் , நீலகிரி , கோவை , தேனி , திண்டுக்கல் , சேலம் , நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

மத்திய அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, 7ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!