மோசடி இடம்பெற்றதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அரசாங்க அமைச்சர்

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு தொகை வெள்ளைப்பூண்டு தொடர்பில் மோசடி இடம்பெற்றிருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பாக அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ (Gotabaya Rajapaksa) அல்லது அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!