பாகிஸ்தானில் பாரிய நிலஅதிர்வு: 20 பேர் உயிரிழப்பு – 300 பேர் காயம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

பாகிஸ்தான் Balochistan மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை குறித்த நில அதிர்வு 5 தசம் 7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நில அதிர்வு காரணமாக குறித்த பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!