வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ள, ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையொப்பமிட்டப்பட்ட கடிதம் ஜீவன் தியாகராஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை விரைவில் அவர் இராஜினமா செய்வார் என்றும் அறிய முடிகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!