இத்தாலி வெளியிட்ட அறிவிப்பு: கடும் கோபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்! October 11, 2021 7:40 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இத்தாலியில் அலுவலகம் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றுவரை ஒரு முடிவுக்கு வராமல் உலகம் முழுவதும் தீயாய் பரவி வருகின்றது. கொரோனாவை எதிர்த்து போராடும் பேராயுதமாய் தடுப்பூசி விளங்கி வருகின்றது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள சிலர் அஞ்சுகின்றனர். இதனால் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல முடியும் என்று பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.வருகின்ற அக்டோபர் 15ஆம் திகதி முதல் இத்தாலி நாட்டில் கிரீன் பாஸ் எனப்படும் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அலுவலகம் செல்ல முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் என இருவருக்குமே இந்த விதிமுறை பொருந்தும் என்றும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஊழியர்கள் கிரீன் பாஸ் இல்லாமல் 5 முறைக்கு மேல் வேலைக்கு வந்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.ரோம் நகரத்தின் பியாஸ்ஸா டெல் போபோலோ என்ற பகுதியில் கிரீன் பாஸ் கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது பொலிசார் தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தை கலைத்தனர். மேலும் போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நிகழ்த்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…