பாடசாலைகளை மீள திறக்கும் இலங்கையின் தீர்மானத்திற்கு UNICEF நிறுவனம் பாராட்டு

பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கும் இலங்கையின் தீர்மானத்திற்கு UNICEF நிறுவனம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

UNICEF நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் முழுமையாக மீண்டும் திறப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும்  குறித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதனை உறுதி செய்யுமாறும் UNICEF நிறுவனம்  அறிவுறுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!