நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்குப் பிணை…!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

அவர் 50 இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்,
இதேவேளை, அவரது வீட்டில் 16 வயதான சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!