கிரிக்கெட் முகாமைத்துவ விவகாரம் – ரோஹித ராஜபக்ஸ மறுப்பு

இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்துடன் தனது பெயரைத் தொடர்புபடுத்தி வெளியான தகவல்களை ரோஹித ராஜபக்ஸ மறுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய மகனான அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் மூலம் இதனை தெரிவித்துள்ளார்

இதற்கமைய ஶ்ரீலங்கா கிரிக்கெட் முகாமைத்துவத்தில் ஈடுபடுதல் அல்லது லங்கா பிறீமியர் லீக்கில் விளையாடுவது தொடர்பில் தனக்கு எண்ணம் கிடையாது என ரோஹித ராஜபக்ஸ கூறியுள்ளார்.

மேலும் Rugby 7 போட்டிக்காக தாம் தற்போது தயாராகி வருவதாகவும், ST. Thomas கல்லூரியின் பழைய மாணவர் அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!