நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இலங்கையின் இன்றைய வானிலையில்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.

மதியம் அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்கு சரிவு, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகம் சில நேரங்களில் (50-60) கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!